என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்-விவசாயிகள் வலியுறுத்தல்
Byமாலை மலர்8 Nov 2021 9:04 AM GMT (Updated: 8 Nov 2021 9:04 AM GMT)
காய்கறி சாகுபடி விளைநிலங்களும் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பி.ஏ.பி. நான்காம் மண்டல பாசனம் மற்றும் மானாவாரியாக பல ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சோளம் சாகுபடி களை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலைப்பயிர்கள் பாதித்துள்ளன.கொங்கல குறிச்சி உட்பட்ட பகுதிகளில் தொடர் மழை மற்றும் காற்றுக்கு மக்காச்சோள பயிர்கள் அடியோடு சாய்ந்து உள்ளன.
இதேபோல்காய்கறி சாகுபடி விளைநிலங்களும் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி தருணத்திலும் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அடியோடு சாய்ந்ததால் சாகுபடியில் நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே இதுகுறித்து வருவாய் துறை ,வேளாண்மை துறை வாயிலாக ஆய்வு நடத்தி நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X