என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலையில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
Byமாலை மலர்7 Nov 2021 8:53 AM GMT (Updated: 7 Nov 2021 8:53 AM GMT)
ராஜரத்தினம் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ராஜரத்தினம் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றுவிட்டார்.
உடுமலை:
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிவசக்தி காலனியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம்(வயது50). இவர் கடந்த அக்டோபர் 9-ந் தேதி வீட்டை பூட்டி கொண்டு அதே பகுதியில் வாடகை பணம் வசூலிக்க சென்றதாக கூறப்படுகிறது.
இதை நோட்டமிட்ட ஆசாமி ராஜரத்தினம் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்து ராஜரத்தினம் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றுவிட்டார்.
இதுகுறித்து அவர் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், போலீஸ் துணைசூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா, மணிகண்டன், முத்துமாணிக்கம், பஞ்சலிங்கம், லிங்கேஸ்வரன் உள்ளிட்ட போலீசார் குற்றவாளியை பல்வேறு இடங்களில் கடந்த 25 நாட்களாக தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் தாராபுரம் ரோடு காமராஜர் சிலை அருகே தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தார். அவரை பிடித்த போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அதில் உடுமலை காந்திபுரத்தைச் சேர்ந்த ராஜா(37) என்பதும் ராஜரத்தினத்தின் நகையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரிடமிருந்த நகை பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X