search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா

    நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    நாமக்கல்:

    தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 52 ஆயிரத்து 431 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 41 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது.

    இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,472 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 49 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

    இதனிடையே நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 501 பேர் பலியாகி உள்ள நிலையில், நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 502 ஆக ஆனது. நாமக்கல் மாவட்டத்தில் 51,512 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 458 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×