search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    தூத்துக்குடியில் தெப்பக்குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

    தூத்துக்குடியில் தெப்பக்குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 52). கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளத்துக்கு வந்தாராம். அங்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. அவர் தெப்பக்குளத்தில் குளிப்பதற்காக இறங்கினாராம். அப்போது எதிர்பாராதவிதமாக மாரிமுத்து குளத்தில் கால் தவறி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×