என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போன் வாங்கித்தராததால் பள்ளி மாணவி தற்கொலை
Byமாலை மலர்5 Nov 2021 9:44 AM GMT (Updated: 5 Nov 2021 9:44 AM GMT)
பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால் விரக்தியடைந்து பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் புதுக்கடை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிள்ளியூர்:
புதுக்கடை அருகே உள்ள பூட்டேற்றி தொழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். விவசாயி. இவரது மகள்கள் ஆரதி, வீனா(வயது15). ஆரதி லேப் டெக்னீசியனுக்கு படித்தார். அவரது தங்கை வீனா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வந்தார்.
இந்நிலையில் ஆரதிக்கு அய்யப்பன் செல்போன் வாங்கி கொடுத்திருக்கிறார். இதனால் தனக்கும் செல்போன் வாங்கித்தருமாறு பெற்றோரிடம் வீனா கேட்டுள்ளார். அதற்கு பிளஸ்-2 முடித்ததும் வாங்கித் தருவதாக கூறியிருக்கின்றனர். ஆனால் தனக்கு இப்போதே செல்போன் வேண்டும் என்ற மாணவி கேட்டுள்ளார்.
அதற்கு அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர். பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால் விரக்தியடைந்த மாணவி வீனா, கடந்த 2-ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கருங்கல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் மாணவி வீனா இறந்துவிட்டார். இது குறித்து புதுக்கடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால் விரக்தியடைந்து பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் புதுக்கடை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கடை அருகே உள்ள பூட்டேற்றி தொழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். விவசாயி. இவரது மகள்கள் ஆரதி, வீனா(வயது15). ஆரதி லேப் டெக்னீசியனுக்கு படித்தார். அவரது தங்கை வீனா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வந்தார்.
இந்நிலையில் ஆரதிக்கு அய்யப்பன் செல்போன் வாங்கி கொடுத்திருக்கிறார். இதனால் தனக்கும் செல்போன் வாங்கித்தருமாறு பெற்றோரிடம் வீனா கேட்டுள்ளார். அதற்கு பிளஸ்-2 முடித்ததும் வாங்கித் தருவதாக கூறியிருக்கின்றனர். ஆனால் தனக்கு இப்போதே செல்போன் வேண்டும் என்ற மாணவி கேட்டுள்ளார்.
அதற்கு அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர். பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால் விரக்தியடைந்த மாணவி வீனா, கடந்த 2-ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கருங்கல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் மாணவி வீனா இறந்துவிட்டார். இது குறித்து புதுக்கடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால் விரக்தியடைந்து பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் புதுக்கடை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X