என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முல்லை பெரியாறு அணை விவகாரம்: அ.தி.மு.க.வினரின் போராட்டம் குறித்து பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்
Byமாலை மலர்5 Nov 2021 4:45 AM GMT (Updated: 5 Nov 2021 5:33 AM GMT)
முல்லை பெரியாறு அணையை பார்வையிடுவதற்காக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மதுரை வந்தார்.
அவனியாபுரம்:
முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு விதியை மீறி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இது குறித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 9-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையை பார்வையிடுவதற்காக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மதுரை வந்தார்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து கொண்டிருக்கிறதே என்று கேட்டபோது, முல்லை பெரியாறு அணையை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்றார்.
முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு விதியை மீறி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இது குறித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 9-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையை பார்வையிடுவதற்காக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் அவரிடம் முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தை அறிவித்துள்ளார்களே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு துரைமுருகன் பதில் அளிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் முல்லை பெரியாறு அணையை எப்போதாவது நேரில் சென்று பார்த்தாரா? என்பதற்கு பதில் சொல்லிவிட்டு போராட்டம் நடத்தட்டும் என்றார்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து கொண்டிருக்கிறதே என்று கேட்டபோது, முல்லை பெரியாறு அணையை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்றார்.
பேட்டியின் போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், தி.மு.க. நிர்வாகிகள் இளைஞரணி ராஜா, வாடிப்பட்டி பால்பாண்டி, திருப்பரங்குன்றம் ஒன்றிய சேர்மன் வேட்டையன் உள்பட பலர் இருந்தனர்.
இதையும் படியுங்கள்... தீபாவளி எதிரொலி- சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X