என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இறந்தவரின் உடலை ஒப்படைக்க ரூ.11 ஆயிரம் லஞ்சம்- சுகாதார ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்2 Nov 2021 3:41 AM GMT (Updated: 2 Nov 2021 3:41 AM GMT)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை ஒப்படைக்க ரூ.11 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுகாதார ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை நன்மங்கலத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், ‘எனது தந்தை இன்பசேகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். அவரது உடலை முறைப்படி எங்களிடம் ஒப்படைக்க மேடவாக்கம் சுகாதாரத்துறை ஆய்வாளர் தசரதன் ரூ.11 ஆயிரம் பணம் வாங்கினார்.
ஆனால் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை ஒப்படைக்க பணம் வாங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதை மீறி பணம் வாங்கிய அதிகாரி தசரதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’, என்று கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தசரதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X