search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை -அரசாணை வெளியீடு

    தீபாவளிக்கு மறுநாளான 5-ந்தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    சென்னை: 

    தமிழகம் முழுவதும் வருகிற 4-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். 

    இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாளான 5-ந்தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

    அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5-ந்தேதி அளிக்கப்படும் விடுமுறையை ஈடுசெய்ய வரும் 20-ந்தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    5-ந்தேதி விடுமுறையால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால் சந்தோசமாக 
    தீபாவளி
     பண்டிகையை கொண்டாடலாம். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த விடுமுறையை அளித்துள்ளது.


    Next Story
    ×