என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் கல்லம்பாளையத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்31 Oct 2021 9:17 AM GMT (Updated: 31 Oct 2021 9:17 AM GMT)
சாக்கடை கால்வாய் சரியாக சீரமைக்கபடாமல் இருப்பதால் சாக்கடை கழிவுநீர் மற்றும் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் கல்லம்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகளுக்காக அங்கு குழிகள் தோண்டப்பட்டது. இந்த குழிகள் சரியாக மூடப்படாமல் இருப்பதால் சாலையில் மழை நீர் தேங்குகிறது.
மேலும் சாக்கடை கால்வாய் சரியாக சீரமைக்கபடாமல் இருப்பதால் சாக்கடை கழிவுநீர் மற்றும் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே குழியை மூட வேண்டும் மற்றும் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும் சாக்கடையை சுத்தம் செய்யக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் இன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X