search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவரின் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்த காட்சி.
    X
    தேவரின் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்த காட்சி.

    முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

    பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், அமைப்பினர் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.
    காங்கேயம்:

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. 

    திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் ஆரத்தொழுவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவரின் உருவப்படத்திற்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கலெக்டர் வினீத் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், அமைப்பினர் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.
    Next Story
    ×