search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    தமிழக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை- ஜி.கே.வாசன்

    தேசியம், தெய்வீகத்தை இரு கண்களாக போற்றி உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்து காட்டியவர் முத்துராமலிங்கதேவர் என ஜி.கே.வாசன் கூறினார்.
    மதுரை:

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழுஉருவ வெண்கல சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேசியம், தெய்வீகத்தை இரு கண்களாக போற்றி உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்து காட்டியவர் முத்துராமலிங்கதேவர். அவருக்கு இந்த நேரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் உரிய மரியாதை செய்து உள்ளது. முல்லைபெரியாறு அணை லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதரமாக உள்ளது. நமது உரிமையை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இருமாநிலத்தின் நட்பை கேரள அரசு வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.


    Next Story
    ×