என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில் அருகே சர்ச் - எஸ்.பி.யிடம் இந்து முன்னணி பரபரப்பு புகார்
Byமாலை மலர்29 Oct 2021 10:14 AM GMT (Updated: 29 Oct 2021 10:14 AM GMT)
எந்தவித முன் அனுமதியும் பெறாமல் அந்த ஆலயம் கட்டப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
இந்து கோவில் அருகே கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் வடக்கு பகுதி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், திருப்பூர் பெரியபாளையத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் கோவில் அருகே ஒருவர் கிறிஸ்தவ ஆலயம் கட்டி வருகிறார். எந்தவித முன் அனுமதியும் பெறாமல் அந்த ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. இது பற்றி தட்டிகேட்ட போது அவரும் அவரது மனைவியும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X