search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகார் கொடுக்க வந்த இந்து முன்னணியினர்.
    X
    புகார் கொடுக்க வந்த இந்து முன்னணியினர்.

    கோவில் அருகே சர்ச் - எஸ்.பி.யிடம் இந்து முன்னணி பரபரப்பு புகார்

    எந்தவித முன் அனுமதியும் பெறாமல் அந்த ஆலயம் கட்டப்பட்டு வருகிறது.
    திருப்பூர்:

    இந்து கோவில் அருகே கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் வடக்கு பகுதி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், திருப்பூர் பெரியபாளையத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் கோவில் அருகே ஒருவர் கிறிஸ்தவ ஆலயம் கட்டி வருகிறார். எந்தவித முன் அனுமதியும் பெறாமல் அந்த ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. இது பற்றி தட்டிகேட்ட போது அவரும் அவரது மனைவியும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 
    Next Story
    ×