என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலிபரிடம் தங்க சங்கிலி பறித்த 2 மாணவர்கள் கைது
Byமாலை மலர்29 Oct 2021 9:25 AM GMT (Updated: 29 Oct 2021 9:25 AM GMT)
மதுரையில் வாலிபரிடம் தங்க சங்கிலி பறித்தது தொடர்பாக 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை ஆலங்குளம் எஸ்.வி.பி. நகரைச் சேர்ந்த ராஜா மகன் சுகுமார் (வயது 23). இவர் அங்கு உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வருகிறார்.
சுகுமார் நேற்று சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் தீபாவளி செலவுக்கு பணம் கேட்டனர். சுகுமார் தர மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் “தங்கச்சங்கிலியை கொடு, இல்லை என்றால் பீர்பாட்டிலால் குத்தி விடுவோம்” என்று மிரட்டி உள்ளனர். உடனே உயிருக்கு பயந்து சுகுமார் தங்கச்சங்கிலியை கழற்றிக் கொடுத்து உள்ளார். இதனை வாங்கிக்கொண்டு 2 பேரும் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக சுகுமார் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுகுமாரிடம் தங்க நகையை பறித்தது கூடல் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி மாரிமுத்து மகன் சுரேந்தர் (20), ஊமச்சிகுளம் காந்திநகர் காந்திராஜ் மகன் சந்துரு என்கிற குட்டிமணி ( 21) என்பது தெரியவந்தது.
மேற்கண்ட 2 பேரும் மதுரையில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ பொறியியல் பட்டபடிப்பு படித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஆலங்குளம் எஸ்.வி.பி. நகரைச் சேர்ந்த ராஜா மகன் சுகுமார் (வயது 23). இவர் அங்கு உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வருகிறார்.
சுகுமார் நேற்று சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் தீபாவளி செலவுக்கு பணம் கேட்டனர். சுகுமார் தர மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் “தங்கச்சங்கிலியை கொடு, இல்லை என்றால் பீர்பாட்டிலால் குத்தி விடுவோம்” என்று மிரட்டி உள்ளனர். உடனே உயிருக்கு பயந்து சுகுமார் தங்கச்சங்கிலியை கழற்றிக் கொடுத்து உள்ளார். இதனை வாங்கிக்கொண்டு 2 பேரும் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக சுகுமார் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுகுமாரிடம் தங்க நகையை பறித்தது கூடல் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி மாரிமுத்து மகன் சுரேந்தர் (20), ஊமச்சிகுளம் காந்திநகர் காந்திராஜ் மகன் சந்துரு என்கிற குட்டிமணி ( 21) என்பது தெரியவந்தது.
மேற்கண்ட 2 பேரும் மதுரையில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ பொறியியல் பட்டபடிப்பு படித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X