search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திண்டுக்கல்லில் தடகள வீராங்கனையான கல்லூரி மாணவி தற்கொலை

    விளையாட்டிலும், படிப்பிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த கல்லூரி மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள பித்தளைப்பட்டி ஏ.டி.காலனியை சேர்ந்த தங்கபாண்டி மகள் பாரதி(18). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பள்ளி பருவத்தில் இருந்தே தடகள வீராங்கனையாக விளங்கிய பாரதி மாவட்ட மற்றும் மாநில அளவில் நடந்த பல்வேறுபோட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார்.

    இந்நிலையில் தனது வீட்டில் பாரதி தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாட்டிலும், படிப்பிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த கல்லூரி மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×