search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,061 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் தற்போது 12,051 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 26,99,554 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,072 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

    இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,51,431 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது 12,051 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×