search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    இல்லம் தேடி கல்வி திட்டம் -முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

    இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக பள்ளிக்கல்வியை மேலும் மேம்படுத்தும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் விதமாக தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. 

    இந்நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக, முதல்- அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக பள்ளிக்கல்வியை மேலும் மேம்படுத்தும். இந்த திட்டத்திற்கான தன்னார்வலர்களை தேர்வு செய்யும் முறையும், அவர்களது பங்களிப்பும் கல்வியாளர் குழுவால் கண்காணிக்கப்படும்.

    அரசின் வழிகாட்டுதலை முறையாக கடைப்பிடிப்போர் மட்டுமே தன்னார்வலர்களாக தொடர அனுமதிக்கப்படுவர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்போவதில்லை.

    இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக சேவையாற்ற இதுவரை 86,550 பேர் பதிவு செய்துள்ளனர். வருகிற கல்வியாண்டில் 1 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு முதலமைச்சர் கூறி உள்ளார்.
    Next Story
    ×