என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோகனூர் அருகே லாரி டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்28 Oct 2021 10:42 AM GMT (Updated: 28 Oct 2021 10:42 AM GMT)
மோகனூர் அருகே லாரி டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள குமரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாமரத்துபட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 40). லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிதா (36). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளாள். பிரபாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு கவிதா வெப்படையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
ஆனால் மாமியார் வீட்டுக்கும் மது குடித்து விட்டு சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மனைவிக்கு போன் செய்த பிரபாகரன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்ததாகவும், மது குடிப்பதை நிறுத்தினால் மட்டுமே குடும்பம் நடத்த வருவதாகவும் அவர் கூறினார்.
இதனால் விரக்தி அடைந்த பிரபாகரன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து அங்கு சென்ற கவிதா கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் அவர் இதுகுறித்து மோகனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா சம்பவ இடத்துக்கு சென்று பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர் அருகே உள்ள குமரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாமரத்துபட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 40). லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிதா (36). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளாள். பிரபாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு கவிதா வெப்படையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
ஆனால் மாமியார் வீட்டுக்கும் மது குடித்து விட்டு சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மனைவிக்கு போன் செய்த பிரபாகரன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்ததாகவும், மது குடிப்பதை நிறுத்தினால் மட்டுமே குடும்பம் நடத்த வருவதாகவும் அவர் கூறினார்.
இதனால் விரக்தி அடைந்த பிரபாகரன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து அங்கு சென்ற கவிதா கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் அவர் இதுகுறித்து மோகனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா சம்பவ இடத்துக்கு சென்று பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X