என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூத்தாநல்லூரில் ஆற்றில் மூழ்கி தச்சு தொழிலாளி உயிரிழப்பு
Byமாலை மலர்28 Oct 2021 10:24 AM GMT (Updated: 28 Oct 2021 10:24 AM GMT)
கூத்தாநல்லூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தச்சு தொழிலாளி உடலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடியில் வசித்து வந்தவர் பாபு (வயது 35). தச்சு தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை லெட்சுமாங்குடி வெண்ணாற்றில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். வெண்ணாற்றின் கரையோரத்தில் உள்ள படித்துறை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆற்றில் குளித்துள்ளார். அப்போது ஆற்றில் பாபு மூழ்கி மாயமானார்.
அந்த வழியாக சென்றவர்கள் பாபுவின் மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது உடைகள் படித்துறையில் நீண்ட நேரமாக கிடப்பதை கண்டு கூத்தாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து இரவு முழுவதும் வெண்ணாற்றில் பாபுவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை லெட்சுமாங்குடி பாலம் அருகே ஆற்றில் பாபுவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் உடலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பாபுவிற்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடியில் வசித்து வந்தவர் பாபு (வயது 35). தச்சு தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை லெட்சுமாங்குடி வெண்ணாற்றில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். வெண்ணாற்றின் கரையோரத்தில் உள்ள படித்துறை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆற்றில் குளித்துள்ளார். அப்போது ஆற்றில் பாபு மூழ்கி மாயமானார்.
அந்த வழியாக சென்றவர்கள் பாபுவின் மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது உடைகள் படித்துறையில் நீண்ட நேரமாக கிடப்பதை கண்டு கூத்தாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து இரவு முழுவதும் வெண்ணாற்றில் பாபுவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை லெட்சுமாங்குடி பாலம் அருகே ஆற்றில் பாபுவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் உடலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பாபுவிற்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X