search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருச்செந்தூர் தனியார் விடுதியில் பல் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

    திருச்செந்தூர் தனியார் விடுதியில் பல் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள குறிஞ்சி நகர் 4-வது தெரு வீரபாண்டியபட்டினத்தைச் சேர்ந்தவர் கோபி கண்ணன் (வயது 26).

    இவர் பல் மருத்துவம் படித்து விட்டு முதுகலை பட்டம் படிப்பதற்கு சென்னையில் விண்ணப்பம் செய்துள்ளார்.

    நேற்று இவரது சகோதரர் வினோத்குமாரிடம் தான் ஜெராக்ஸ் எடுத்து வருவதாக கூறிச்சென்றவர் வெகு நேரமாக வீட்டிற்கு வரவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவரை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கோபி கண்ணனின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டனர்.

    அப்போது திருச்செந்தூரில் பயனியர் விடுதி சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் விடுதியை காண்பித்தது. அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×