என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கமல் ஹாசனுடன் கார் தொழிற்சாலை ஊழியர்கள் சந்திப்பு
Byமாலை மலர்27 Oct 2021 7:57 PM GMT (Updated: 27 Oct 2021 7:57 PM GMT)
கமல் ஹாசன் போர்டு நிறுவனத்தை தக்கவைக்க, தான் மேலும் முயற்சி செய்வதாக கூறினார்.
சென்னை:
உலகப்புகழ் பெற்ற அமெரிக்க கார் நிறுவனமான போர்டு நிறுவனம், தனது உற்பத்தி பிரிவை இந்தியாவில் சென்னையில் நிறுவி உற்பத்தி செய்து வந்தது. பின்னர் அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு பிரிவை குஜராத்தில் தொடங்கியது. அதன் மூலம் தமிழகத்திலும், குஜராத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், போர்டு நிறுவனம் தனது இந்திய நிறுவனங்களை மூடுவதாக அறிவித்தது. பெரும் வேலை இழப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டித்து குரல்கொடுத்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில், அந்த நிறுவன பணியாளர்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர். அவர்களிடம், கமல்ஹாசன் போர்டு நிறுவனத்தை தக்கவைக்க, தான் மேலும் முயற்சி செய்வதாக கூறினார்.
மேற்கண்ட தகவல் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நவம்பர் 25-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X