search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நவம்பர் 25-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வரும் 1-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
    திருச்சி:

    திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆயத்தப்பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி திருச்சி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமை தாங்கி பேசுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வரும் 1-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனை வைத்து கொண்டு நவம்பர் 25-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். குறுகிய காலமே இருப்பதால் சவாலான இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×