என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருத்து வேறுபாட்டால் பேச மறுத்த கல்லூரி மாணவியை தாக்கிய டிரைவர் கைது
Byமாலை மலர்27 Oct 2021 10:30 AM GMT (Updated: 27 Oct 2021 10:30 AM GMT)
கோவை துடியலூர் அருகே கருத்து வேறுபாட்டால் பேச மறுத்த கல்லூரி மாணவியை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை துடியலூர் அருகே உள்ள பழனி கவுண்டன்புதூரை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்., 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
மாணவிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பிரேம்குமார் (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மாணவி பிரேம்குமாருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சம்பவத்தன்று மாணவி கல்லூரியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்தார். அங்கு மாணவிக்காக காத்திருந்த பிரேம்குமார் மாணவியின் அருகே சென்று ஏன் காதலிக்க மறுக்கிறாய் என கேட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார் மாணவியை தாக்கி அவர் கையில் வைத்து இருந்த செல்போனை உடைத்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து மாணவி துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தாக்கிய டிரைவர் பிரேம்குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை துடியலூர் அருகே உள்ள பழனி கவுண்டன்புதூரை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்., 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
மாணவிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பிரேம்குமார் (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மாணவி பிரேம்குமாருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சம்பவத்தன்று மாணவி கல்லூரியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்தார். அங்கு மாணவிக்காக காத்திருந்த பிரேம்குமார் மாணவியின் அருகே சென்று ஏன் காதலிக்க மறுக்கிறாய் என கேட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார் மாணவியை தாக்கி அவர் கையில் வைத்து இருந்த செல்போனை உடைத்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து மாணவி துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தாக்கிய டிரைவர் பிரேம்குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X