என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்27 Oct 2021 9:51 AM GMT (Updated: 27 Oct 2021 9:51 AM GMT)
தண்ணீர் திறப்பால் திருப்பூர் மாவட்டத்தில் 4,686 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் இருந்து ஏற்கனவே பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆறு பழைய ராஜவாய்க்கால்களுக்கு (குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) இரண்டாம் போக பாசனத்துக்காக அமராவதி ஆற்று மதகு வழியாக 1,404மில்லியன் கன அடிக்கு மிகாமல் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந்தேதி வரையிலான 120 நாட்களில் (நாளொன்றுக்கு 250 கன அடி வீதம் 65 நாட்கள் தண்ணீர் திறப்பு -& 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு) தகுந்த இடைவெளி விட்டு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து இன்று காலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டன. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 4,686 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X