என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபாவளி பண்டிகை - உடுமலையில் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்
Byமாலை மலர்27 Oct 2021 9:43 AM GMT (Updated: 27 Oct 2021 9:43 AM GMT)
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை:
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பொது மக்கள் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கடை வீதிக்கு வந்து செல்கின்றனர். கிராமங்களில் இருந்து பஸ்சில் உடுமலை நகருக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் பஸ்கள் மற்றும் பஸ் நிலையம், பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் திருடர்கள் புகுந்து பொதுமக்கள் வைத்துள்ள பொருட்களை திருடிச் செல்வதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உடுமலையில் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
அதன்படி உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
சிலர் உங்களிடம் பொருள்களைதிருடுவதற்காக கீழே பணம் கிடக்கிறது என்று கூறி உங்கள் கவனத்தை திசை திருப்பகூடும். அவ்வாறு யாராவது கூறினால் ஏமாறாமல் விழிப்புடன் இருங்கள். சந்தேகப்படும்படியான நபர்கள் தெரிந்தால் போலீசுக்கு தெரியபடுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா கண்ணா, (சட்டம் ஒழுங்கு ), குற்றப்பிரிவு சுஜாதா ,வெங்கடேசன் (போக்குவரத்து பிரிவு) ஆகியோர் பேசினர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்தையா, போலீசார், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், பஸ் பயணிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பொதுமக்களிடமும் கடைகள் நிறுவனங்கள் ஆகிய இடங்களிலும் போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். பொதுமக்கள் காவல்துறை அவசர உதவி அல்லது செயலியை பயன்படுத்தலாம்.
சந்தேக நபர்களை கண்டால் அதை போட்டோ எடுத்து காவல் நிலையம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் இவ்வாறு அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X