search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தம் பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    உடுமலை:

    உடுமலை அரசு போக்குவரத்து கிளை முன் சி.ஐ.டி.யு. சார்பில், தன்னிச்சையாக போன அறிவிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

    கோரிக்கைகள் குறித்து கிளைத் தலைவர் பாபு, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்க திருப்பூர் மண்டல துணைத்தலைவர் துணைப் பொதுச்செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான போனஸ் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தம் பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளரின் 70 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    Next Story
    ×