என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் பஸ் நிலையத்தில் பயணியிடம் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்27 Oct 2021 8:08 AM GMT (Updated: 27 Oct 2021 8:08 AM GMT)
மோதியபடி பஸ் ஏறியதால் சந்தேகமடைந்த ஆறுமுகம் தனது சட்டைப் பையைத் தொட்டு பார்த்தபோது அதில் பணம் இல்லை.
பல்லடம்:
பல்லடம் பஸ் நிலையத்தில் நேற்று மாலை இலவந்தி வடுகபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார். அப்போது இவர் மீது மோதியபடி 2 பேர் பஸ்சில் ஏறினர்.
மேலும் ஆறுமுகத்தின் சட்டைபையில் இருந்த ரூ. 500 ஜேப்படி செய்துள்ளனர். இவர்கள் மோதியபடி பஸ் ஏறியதால் சந்தேகமடைந்த ஆறுமுகம் தனது சட்டைப் பையைத் தொட்டு பார்த்தபோது அதில் பணம் இல்லை .
இதையடுத்து திருடர்கள் பிடியுங்கள் என சத்தமிட பஸ்சுக்குள் இருந்த பொதுமக்கள் 2 நபர்களையும் பிடித்தனர். இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் .
சம்பவ இடம் வந்த போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் திருச்சி பொன்மலையைச் சேர்ந்த வேல்முருகன் மகன் லோகேஷ் பாபு(வயது 24), திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் மகன் தமிழ்ச்செல்வன் (22) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X