search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடம் பஸ் நிலையத்தில் பயணியிடம் திருடிய 2 பேர் கைது

    மோதியபடி பஸ் ஏறியதால் சந்தேகமடைந்த ஆறுமுகம் தனது சட்டைப் பையைத் தொட்டு பார்த்தபோது அதில் பணம் இல்லை.
    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்தில் நேற்று மாலை இலவந்தி வடுகபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார். அப்போது இவர் மீது மோதியபடி 2 பேர் பஸ்சில் ஏறினர்.

    மேலும் ஆறுமுகத்தின் சட்டைபையில் இருந்த ரூ. 500 ஜேப்படி செய்துள்ளனர். இவர்கள் மோதியபடி பஸ் ஏறியதால் சந்தேகமடைந்த ஆறுமுகம் தனது சட்டைப் பையைத் தொட்டு  பார்த்தபோது அதில் பணம் இல்லை .

    இதையடுத்து திருடர்கள் பிடியுங்கள் என சத்தமிட பஸ்சுக்குள் இருந்த பொதுமக்கள் 2 நபர்களையும் பிடித்தனர். இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் .

    சம்பவ இடம் வந்த போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் திருச்சி பொன்மலையைச் சேர்ந்த வேல்முருகன் மகன் லோகேஷ் பாபு(வயது 24), திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் மகன் தமிழ்ச்செல்வன் (22) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×