search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெள்ளகோவில் வட்டார விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தை - நாளை நடக்கிறது

    பேச்சுவார்த்தையில் 8 விசைத்தறி உரிமையாளர்கள் சங்க உரிமையாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் சுற்றுப்பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 40 ஆயிரம் பேர் பயன் பெறுகின்றனர்.

    தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தை நாளை 28-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை3 மணிக்கு பயணியர் விடுதியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையிலும், கலெக்டர் வினீத் முன்னிலையிலும் நடக்கிறது. இதில் 8 விசைத்தறி உரிமையாளர்கள் சங்க உரிமையாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
    Next Story
    ×