என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 218 பேருக்கு அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை
Byமாலை மலர்27 Oct 2021 6:40 AM GMT (Updated: 27 Oct 2021 6:40 AM GMT)
பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகள் கொட்டிய 218 பேர் மீது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
சென்னை:
சென்னையில் பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் குப்பைகள், கட்டிட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
குப்பைகள் மற்றும் கட்டிடக்கழிவுகளை கொட்டுவதற்கு ஒவ்வொரு மண்டலங்களிலும் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த இடங்களில் மட்டுமே கழிவுகளை கொட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதை மீறி பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகள் கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 218 பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டது.
நேற்று குப்பைகள் கொட்டியதாக ரூ.92 ஆயிரத்து 500-ம், கட்டிட கழிவுகள் கொட்டியதாக ரூ.70 ஆயிரமும் வசூலிக்கப்பட்டன. இதுவரையில் மொத்தம் ரூ.26 லட்சத்து 63 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X