என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.10 லட்சம் அபராதம் வசூல்
Byமாலை மலர்27 Oct 2021 2:22 AM GMT (Updated: 27 Oct 2021 2:22 AM GMT)
சென்னையில் முக கவசம் அணியாமல் வந்த 5 ஆயிரத்து 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முக கவசம் அணியாமல் வெளிவரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை :
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் புத்தாடை வாங்குவதற்காக தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் உள்பட வணிகதள பகுதிகளில் குவிந்து வருகின்றனர். பண்டிகை கால உற்சாகத்தில் கொரோனா பரவலை பலர் மறந்துவிடுகின்றனர்.
எனவே 3-வது அலை ஏற்படாத வகையில் மாநகராட்சியும், போலீஸ் துறையும் இணைந்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் சென்னையில் முக கவசம் அணியாமல் வந்த 5 ஆயிரத்து 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.10 லட்சத்து 8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் புத்தாடை வாங்குவதற்காக தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் உள்பட வணிகதள பகுதிகளில் குவிந்து வருகின்றனர். பண்டிகை கால உற்சாகத்தில் கொரோனா பரவலை பலர் மறந்துவிடுகின்றனர்.
எனவே 3-வது அலை ஏற்படாத வகையில் மாநகராட்சியும், போலீஸ் துறையும் இணைந்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் சென்னையில் முக கவசம் அணியாமல் வந்த 5 ஆயிரத்து 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.10 லட்சத்து 8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்க வரும் கடை வீதிகள், மார்க்கெட் பகுதிகள், பஸ், ரெயில் நிலையங்களில் முக கவச சோதனை நடத்தப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் வெளிவரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்...ரஷியாவில் இறக்கை கட்டி பறக்கிறது கொரோனா
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X