என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குளச்சல் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
குளச்சல்:
திங்கள்நகர் அருகே நெய்யூர் ஆலங்கோடை சேர்ந்தவர் முருகன். லாரி டிரைவர். இவரது மனைவி சாவித்திரி (வயது 60).
சாவித்திரி நேற்று உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மண்டைக்காடு செல்வதற்கு குமாரகோவில் இருந்து மண்டைக்காடு சென்ற பஸ்சில் ஏறினார்.பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாவித்திரி நின்று கொண்டே பயணம் செய்தார். பஸ் திங்கள்நகரை கடந்து கல்லுக்கூட்டம் நிறுத்தத்தில் நிற்கும்போது அவர் திடீரென கழுத்தை பார்க்கும்போது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகையை காணவில்லை. இதனால் பஸ்சுக்குள் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ? மர்ம நபர் மூதாட்டியிடம் நகை பறித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சாவித்திரி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற நபர் குறித்து துப்பு துலக்கி வருகின்ற னர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்