search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    குளச்சல் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

    குளச்சல் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குளச்சல்:

    திங்கள்நகர் அருகே நெய்யூர் ஆலங்கோடை சேர்ந்தவர் முருகன். லாரி டிரைவர். இவரது மனைவி சாவித்திரி (வயது 60).

    சாவித்திரி நேற்று உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மண்டைக்காடு செல்வதற்கு குமாரகோவில் இருந்து மண்டைக்காடு சென்ற பஸ்சில் ஏறினார்.பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாவித்திரி நின்று கொண்டே பயணம் செய்தார். பஸ் திங்கள்நகரை கடந்து கல்லுக்கூட்டம் நிறுத்தத்தில் நிற்கும்போது அவர் திடீரென கழுத்தை பார்க்கும்போது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகையை காணவில்லை. இதனால் பஸ்சுக்குள் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ? மர்ம நபர் மூதாட்டியிடம் நகை பறித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சாவித்திரி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற நபர் குறித்து துப்பு துலக்கி வருகின்ற னர்.

    Next Story
    ×