என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோழி இறைச்சி குறித்து வதந்தி பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
Byமாலை மலர்26 Oct 2021 4:29 AM GMT (Updated: 26 Oct 2021 4:29 AM GMT)
புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அரசே இலவச பயிற்சியுடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கறிக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:
கறிக்கோழி உற்பத்தியில் ஆந்திரா, மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக வாரம் 2 கோடி கிலோ கறிக்கோழி உற்பத்தியுடன் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இத்தொழில் ஆண்டுதோறும் ஐந்து சதவீத வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இருப்பினும் ஊட்டச்சத்து உணவான கறிக்கோழிகள் குறித்து நுகர்வோருக்கும் இத்தொழில் குறித்து தொழில் முனைவோருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. இதன் காரணமாக குறைந்த அளவிலேயே தொழில் வளர்ச்சி உள்ளது.
தொழிலை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தொழில் முனைவோரிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அரசே இலவச பயிற்சியுடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும்.
மேலும் கறிக்கோழி உணவின் ஊட்டச்சத்து குறித்து நுகர்வோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X