என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய மாணவர் போக்சோவில் கைது
Byமாலை மலர்26 Oct 2021 4:21 AM GMT (Updated: 26 Oct 2021 4:21 AM GMT)
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுமிக்கு அதே பள்ளியில் பிளஸ்-1 படித்த மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். சிறுமியின் பெற்றோர் வேலைக்கு செல்லும் நேரத்தில் அங்கு செல்லும் சிறுவன் மாணவியிடம் திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்து வந்தார். 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்ததால் மாணவி கர்ப்பம் ஆனார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து டாக்டர்கள் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் மாணவியிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என கேட்டனர். அதற்கு மாணவி கர்ப்பத்துக்கு காரணம் பிளஸ்-2 மாணவர் என தெரிவித்தார். உடனடியாக அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் சிறுமியை கர்ப்பமாக்கிய பிளஸ்-2 மாணவரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ கட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுமிக்கு அதே பள்ளியில் பிளஸ்-1 படித்த மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். சிறுமியின் பெற்றோர் வேலைக்கு செல்லும் நேரத்தில் அங்கு செல்லும் சிறுவன் மாணவியிடம் திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்து வந்தார். 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்ததால் மாணவி கர்ப்பம் ஆனார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து டாக்டர்கள் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் மாணவியிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என கேட்டனர். அதற்கு மாணவி கர்ப்பத்துக்கு காரணம் பிளஸ்-2 மாணவர் என தெரிவித்தார். உடனடியாக அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் சிறுமியை கர்ப்பமாக்கிய பிளஸ்-2 மாணவரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ கட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X