search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

    கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள நேமலூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன் (வயது 30). இவருக்கு திருமணமாகி செஞ்சியம்மாள் (24) என்ற மனைவி உள்ளார்.இவர் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் சத்தியவேடு சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    நேமலூர் சரஸ்வதி நகர் அருகே அவர் வரும்போது, அதே திசையில் ஆந்திராவில் இருந்து வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.

    இந்த விபத்தில் கூலித்தொழிலாளி வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×