என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கருங்கல் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
கருங்கல்:
கருங்கல் அருகே குறும்பனை பாரியக்கல் கடற்கரை கருங்கல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கே 3 வாலிபர்கள் சந்தேகப்படும் நிலையில் நிற்பதை கண்டனர். அவர்களை பிடித்து விசாரிக்க முற்படும்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்ற 2 பேரையும் பிடித்து விசாரித்தபோது ஒருவர் கீழ்குளம் பகுதியை சேர்ந்த அனிஷ் (வயது 23), மற்றொருவர் தொழிக்கோடு பகுதியை சேர்ந்த வினித் (21) என்பதும், இவர்கள் அப்பகுதியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்த சுமார் 250 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் ரூ.200-ம் போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய கீழ்குளம் பகுதியை சேர்ந்த சுபின் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்