search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கருங்கல் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

    கருங்கல் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருங்கல்:

    கருங்கல் அருகே குறும்பனை பாரியக்கல் கடற்கரை கருங்கல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கே 3 வாலிபர்கள் சந்தேகப்படும் நிலையில் நிற்பதை கண்டனர். அவர்களை பிடித்து விசாரிக்க முற்படும்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்ற 2 பேரையும் பிடித்து விசாரித்தபோது ஒருவர் கீழ்குளம் பகுதியை சேர்ந்த அனிஷ் (வயது 23), மற்றொருவர் தொழிக்கோடு பகுதியை சேர்ந்த வினித் (21) என்பதும், இவர்கள் அப்பகுதியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்த சுமார் 250 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் ரூ.200-ம் போலீசார் கைப்பற்றினர்.

    இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய கீழ்குளம் பகுதியை சேர்ந்த சுபின் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×