என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னத்தூரில் இளம்பெண் மர்மச்சாவு - கைதான கணவர், மாமனார் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்25 Oct 2021 8:36 AM GMT (Updated: 25 Oct 2021 8:36 AM GMT)
கடந்த மாதம் 30 - ந்தேதி இரவு நந்தினி மர்மமான முறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், நவக்காடு புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் பானுப்பிரியா என்ற நந்தினி ( வயது 24). இவர்அதே பகுதியைச் சேர்ந்த பிரபு (26) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளார்.
குன்னத்தூர் ஒருக்காம்பாளையம் பகுதியில் வசித்து வந்த தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பனியன் தொழிலாளியான பிரபுக்கு மது பழக்கம் இருந்ததால், மனைவி நந்தினியிடம் அடிக்கடி தகாறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த மாதம் 30 - ந்தேதி இரவு நந்தினி மர்மமான முறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆனதால் இவ்வழக்கு குறித்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும் நந்தினியின் பெற்றோர், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இரு தினங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளின் காலில் விழுந்து முறையிட்டனர்.
இந்தநிலையில் குன்னத்தூர்போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், நந்தினியின் கணவர்பிரபு, பிரபுவின் தந்தை ஆறுமுகம் (55) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X