search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தடகள போட்டியில் பங்கேற்க வீரர்களுக்கு அழைப்பு

    மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியை திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் அறிவித்துள்ளது.
    திருப்பூர்:

    தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியை திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பழங்கரை டீ பப்ளிக் மெட்ரிக் பள்ளியில் வருகிற  நவம்பர் மாதம் 12, 13-ந்தேதிகளில் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

    இதில் 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்த போட்டியில் தகுதி பெறும் வீரர் மற்றும் வீராங்கனையர் நவம்பர் 26, 27, 28-ந்தேதிகளில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர்., கல்லூரி வளாகத்தில் நடக்கும்  மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்பர். 

    எனவே போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாவட்ட தடகள பயிற்சியாளர்கள் மற்றும் தடகள வீரர், வீராங்கனையர் தமிழ்நாடு தடகள சங்கத்தை தொடர்பு கொள்ளலாம் என சங்க தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×