search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி அனந்தன்
    X
    குமரி அனந்தன்

    ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை- மு.க.ஸ்டாலினுக்கு குமரி அனந்தன் பாராட்டு

    பனை வெல்லத்தை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் நடைமுறையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும் என்று குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கற்பகம் என்ற பெயரில் பனை வெல்லத்தை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் நடைமுறையை ராமநாதபுரம் சாயல்குடியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

    இதே போல், வேம்பு, கற்றாழை மற்றும் மூலிகைகளால் ஆன சோப்பு தயாரிப்பது மக்கள் நலன் கருதி செய்யப்படும் நற்காரியங்களாகும். இவற்றிற்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்துள்ளதை பெரிதும் வரவேற்கிறேன். மேலும், தமிழ்த்தறி என்ற தலைப்பில் ஆரணி, சேலம், கோவை, சின்னாளப்பட்டி, திண்டுக்கல், பரமக்குடி ஆகிய ஊர்களில் நெய்யப்படும் புகழ்பெற்ற பாரம்பரிய பட்டுச்சேலைகளும், ஜமுக்காளம், காஞ்சிபுரம் பட்டுப்பாவாடை, சட்டை ஆகியவை விற்பனைக்கு வினியோகிக்கப்பட்டு நெசவாளர்களுக்கு ஊக்கம் அளித்திருப்பதையும் போற்றுகிறேன். இந்த முயற்சிகளை முதல்-அமைச்சர் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் தமிழர்களின் அடையாளம் காக்கப்பட்டு நிச்சயம் உயர்நிலைக்கு செல்கிற வாய்ப்பு ஏற்படும். இத்தகைய முயற்சிகளை மேற்கொண்ட தமிழக முதல்-அமைச்சரை வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×