என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூர் அருகே பொது இடத்தில் கேக் வெட்டியதால் கோஷ்டி மோதல்
Byமாலை மலர்24 Oct 2021 1:18 PM GMT (Updated: 24 Oct 2021 1:18 PM GMT)
ஆம்பூர் அருகே பொது இடத்தில் கேக் வெட்டியதால் கோஷ்டி மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே வீராங்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒருவரின் பிறந்தநாளை அவரது நண்பர்கள் பொது இடத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது அங்கிருந்த சிலர் இதனை தட்டி கேட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் அங்கு இருந்தவர்களை விரட்டியடித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் மோதல் ஏற்படாமல் தடுக்க சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X