search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடசென்னை அ.தி.மு.க. பிரமுகர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
    X
    வடசென்னை அ.தி.மு.க. பிரமுகர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

    வடசென்னை அ.தி.மு.க. பிரமுகர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்

    சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வட சென்னை அ.தி.மு.க. பிரமுகர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
    சென்னை:

    சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த திரு.வி.க.நகர் தெற்கு பகுதி செயலாளர் சுப்புரு, வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட பொருளாளர் மகேஷ், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராஜாமுகமது, வடசென்னை வடகிழக்கு மாவட்ட மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் புகழேந்தி, வடசென்னை கிழக்கு மாவட்ட எம்.ஜி. ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் எஸ்.பி.எஸ்.ராஜா, இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில தலைவர் செந்தமிழ்பாரி, பெரம்பூர் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற செய லாளர் அஸ்லாம், வட்ட செயலாளர் பரிமளம், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் ரவி, வடசென்னை கிழக்கு எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, வடசென்னை தெற்கு (கிழக்கு) எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணை செயலாளர் ராம மஞ்செரி நடராஜன், வடசென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பிரஸ் சேகர், வடசென்னை தெற்கு மாவட்டம், 55-வது வட்ட அவைத்தலைவர் மனோகர், மற்றும் அ.ம.மு.க. கட்சியை சேர்ந்த மாநில வழக்கறிஞர் அணி இணை செயலாளர் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் ஆகியோர் முதல்-அமைச்சர், மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.வில் இணைந்தனர்.

    அப்போது அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி, சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளையஅருணா, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், ஜான் எபினேசர் மற்றும் பகுதிச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×