search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உரிய போனஸ் தொகை கிடைக்கப்பெறாத தொழிலாளர்கள் - ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தை அணுக வேண்டுகோள்

    உரிய போனசை பாத்திர உற்பத்தியாளர்களும், பட்டறைதாரர்களும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட பாத்திரத் தொழிலாளர் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுக்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்டத்தில் எவர்சில்வர், பித்தளை, செம்பு, அலுமினியம் மற்றும் பாத்திரக் கடைகளில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கடந்த ஆண்டைக் காட்டிலும் உரிய போனசை பாத்திர உற்பத்தியாளர்களும், பட்டறைதாரர்களும் வழங்க வேண்டும்.

    அதேவேளையில், உரிய போனஸ் தொகை கிடைக்கப்பெறாத தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×