search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - வருகிற 29ந்தேதி நடக்கிறது

    கூட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் வழங்கப்படும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அளவிலான அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந்தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாகம் அறை எண் 240ல் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் நடக்கிறது.

    இதில் விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க உதவும் வகையில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைக் கொண்ட வேளாண் உதவி மையம், அமைக்கப்பட்டுள்ளது. 

    இங்கு விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் வழங்கப்படும். உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்யப்படும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×