என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியாபாரியை மிரட்டி பணம்-செல்போன் பறிப்பு: 3 பேர் கைது
Byமாலை மலர்23 Oct 2021 10:49 AM GMT (Updated: 23 Oct 2021 10:49 AM GMT)
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வியாபாரியை மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் நயினாகரத்தை சேர்ந்தவர் ஜோதிராஜ் (வயது38), வியாபாரி. இவர் தொழில் தொடர்பாக நெல்லைக்கு வந்திருந்தார்.
பின்னர் பணிகளை முடித்து கொண்டு சொந்த ஊர் திரும்புவதற்காக நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தற்காலிக பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அவர் வேய்ந்தான்குளம் பகுதியில் நடந்து சென்ற போது மர்மநபர்கள் அவரை மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது தருவையை சேர்ந்த சுடலைமணி (27), சி.என்.கிராமத்தை சேர்ந்த சுடலைக்கண் (27), கங்கை கொண்டானை சேர்ந்த இசக்கிமுத்து (27) ஆகியோர் ஜோதிராஜை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் நயினாகரத்தை சேர்ந்தவர் ஜோதிராஜ் (வயது38), வியாபாரி. இவர் தொழில் தொடர்பாக நெல்லைக்கு வந்திருந்தார்.
பின்னர் பணிகளை முடித்து கொண்டு சொந்த ஊர் திரும்புவதற்காக நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தற்காலிக பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அவர் வேய்ந்தான்குளம் பகுதியில் நடந்து சென்ற போது மர்மநபர்கள் அவரை மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது தருவையை சேர்ந்த சுடலைமணி (27), சி.என்.கிராமத்தை சேர்ந்த சுடலைக்கண் (27), கங்கை கொண்டானை சேர்ந்த இசக்கிமுத்து (27) ஆகியோர் ஜோதிராஜை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X