என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.16 சதவீதம் தீபாவளி போனஸ் - ஒப்பந்தம் கையெழுத்தானது
Byமாலை மலர்23 Oct 2021 10:16 AM GMT (Updated: 23 Oct 2021 10:16 AM GMT)
விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2020-21ம் ஆண்டு தீபாவளி போனசாக 13.16 சதவீதம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2020-21ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை சுல்தான் பேட்டை அம்மன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதற்கு மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி., மூர்த்தி, மங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் விசைத்தறி கூலித் துணி உற்பத்தியாளர் சங்க தலைவர் வேலுச்சாமி, நிர்வாகிகள் கோபால், மனோகர், வெங்கடாசலம், பழனிச்சாமி கலந்து கொண்டனர். விசைத்தறி தொழிற்சங்கம் சார்பில் சி.ஐ.டி.யு., முத்துசாமி, வேலுச்சாமி, ஐ.என்.டி.யு.சி., நடராஜன், சபாதுரை, எல்.பி.எப். சிவசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2020-21ம் ஆண்டு தீபாவளி போனசாக 13.16 சதவீதம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளிடையே போனஸ் ஒப்பந்தமும் கையெழுத்தானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X