search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மனைவியை கேலி கிண்டல் செய்த டிரைவருக்கு கத்தி குத்து- வாலிபர் கைது

    கோவையில் மனைவியை கேலி கிண்டல் செய்த டிரைவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூரை அடுத்த கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் பிரவீன் டக்லஸ் (வயது 25). இவரது மனைவி பிரசிதா (22). இவர்களது வீட்டின் அருகே வசித்து வருபவர் ராஜசேகர் (40). டிரைவர்.

    இவருக்கும் பிரவீன் டக்ளஸ் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ராஜசேகர் பிரசிதாவை கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் தனது கணவர் பிரவீன் டக்லசிடம் கூறினார். உடனே அவர் ராஜசேகரிடம் சென்று தட்டிக்கேட்டார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன் டக்லஸ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ராஜசேகரை குத்தினார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜசேகரின் குடும்பத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் இதுகுறித்து ராஜசேகரின் மகன் வீர சூர்யா துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன் டக்லசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோன்று ராஜசேகர் கேலி கிண்டல் செய்ததாக பிரவீன் டக்லஸ் மனைவி பிரசிதா புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் ராஜசேகர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×