என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புன்னம் சத்திரம் அருகே வாகனம் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்23 Oct 2021 10:07 AM GMT (Updated: 23 Oct 2021 10:07 AM GMT)
புன்னம் சத்திரம் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
நொய்யல்:
மண்மங்கலம் அருகே வெண்ணைமலை நாவல் நகரை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (வயது 75), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கிரிஜா (60). இவர்களுடைய 4 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. சந்தானகிருஷ்ணன் தனது மனைவியுடன் இளைய மகள் சத்தியாவுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் சந்தானகிருஷ்ணன் அருகே உள்ள கடைக்கு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
அப்போது கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் உப்புப்பாளையம் பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சந்தான கிருஷ்ணன் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சந்தான கிருஷ்ணனின் மனைவி கிரிஜா கொடுத்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மண்மங்கலம் அருகே வெண்ணைமலை நாவல் நகரை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (வயது 75), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கிரிஜா (60). இவர்களுடைய 4 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. சந்தானகிருஷ்ணன் தனது மனைவியுடன் இளைய மகள் சத்தியாவுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் சந்தானகிருஷ்ணன் அருகே உள்ள கடைக்கு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
அப்போது கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் உப்புப்பாளையம் பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சந்தான கிருஷ்ணன் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சந்தான கிருஷ்ணனின் மனைவி கிரிஜா கொடுத்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X