என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை பூமாலை வீதி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - வருகிற 27ந் தேதி நடக்கிறது
Byமாலை மலர்23 Oct 2021 7:43 AM GMT (Updated: 23 Oct 2021 11:03 AM GMT)
வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) திருவிளக்கு பூஜை, புனிதநீர் வழிபாடுகள், வேள்வி நிறைவு ஆகியவை நடக்கிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை பூமாலை வீதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் வடக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார். கோவில் வளாகத்தில் விநாயகர், ராமலிங்கேஸ்வரர், வள்ளி தெய்வானையோடு முருகன், கொற்றவை, 9 கோள்கள் ஆகியோரின் சந்நிதிகளும் அமையப் பெற்றுள்ளன.
இந்தநிலையில் கோவில் கோபுரங்கள் புதிதாக பல வர்ணம் பூசப்பட்டு, புதிதாக மண்டபம் கட்டப்பட்டு திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து 3 நாட்கள் கும்பாபிஷேக விழா நடக்கிறது.
விழாவில் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) திருவிளக்கு பூஜை, புனிதநீர் வழிபாடுகள், வேள்வி நிறைவு ஆகியவை நடக்கிறது. 26-ந்தேதி திருப்பள்ளியெழுச்சி, விமான கலசம் நிறுவுதல் , மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.
3-ம் நாளான 27-ந்தேதி(புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் விமானம் மற்றும் மூல மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந்தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X