search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைகள் வரன்முறைபடுத்தப்பட்டதற்கான ஆணையை பயனாளி ஒருவருக்கு மாவட்ட கலெக்டர் வினீத் வழங்கிய போது எடுத்த படம்.
    X
    மனைகள் வரன்முறைபடுத்தப்பட்டதற்கான ஆணையை பயனாளி ஒருவருக்கு மாவட்ட கலெக்டர் வினீத் வழங்கிய போது எடுத்த படம்.

    பல்லடத்தில் அனுமதியற்ற மனைகளை முறைப்படுத்தும் சிறப்பு முகாம்

    முகாமை மாவட்ட கலெக்டர் வினீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    பல்லடம்:

    பல்லடம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பல்லடம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை 1.1.1980 ஆண்டிலிருந்து 20.10.2016 ஆண்டு வரை பத்திர பதிவு செய்த மனைகளை வரன்முறை செய்து கொள்ள சிறப்பு முகாம்பல்லடத்தில் நடைபெற்றது. 

    இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த முகாமை மாவட்ட கலெக்டர் வினீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    பின்னர், பயனாளிகளுக்கு வரன்முறை செய்ததற்கான ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சந்திரகுமார், உள்ளூர் திட்டக்குழுமம் உதவி இயக்குனர் தியாகராஜன், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், வில்சன், மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள்,  உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    Next Story
    ×