என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூலி உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு: விசைத்தறியாளர்களின் அடுத்த கட்ட முடிவு என்ன? - ஓரிரு நாளில் அறிவிப்பு
Byமாலை மலர்23 Oct 2021 7:32 AM GMT (Updated: 23 Oct 2021 7:32 AM GMT)
திருப்பூர்,கோவை மாவட்டங்களில், 2.50 லட்சம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் விசைத்தறியாளர்களுக்கான புதிய கூலி உயர்வு குறித்து கோவையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை நவம்பர்- 12- ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து திருப்பூர்,கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
திருப்பூர்,கோவை மாவட்டங்களில், 2.50 லட்சம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள், குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். போதுமான வேலை வாய்ப்புகள் இருந்தும், கூலி உயர்வு இல்லாதது, உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்று தொடர்ந்த செலவுகளால் விசைத்தறி தொழிலில் லாபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கடந்த 2014ல் கடைசியாக கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 2017 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்திருக்க வேண்டிய புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை.
தற்போது கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை ஆணையாளர்கள் முன்னிலையில் இதுவரை 8 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை . கோவையில் நேற்று தொழிலாளர் துறை இணை ஆணையர் முன்னிலையில் ஜவுளிஉற்பத்தியாளர்களுடன் விசைத்தறியாளர்களுக்கு புதிய கூலி உயர்வு குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.
சோமனூர், திருப்பூர்,அவிநாசி உள்ளிட்ட மற்ற பகுதிகளின் ஜவுளி உற்பத்தியாளர்கள் வரவில்லை, இருதரப்பு கருத்துக்களையும் கேட்ட அதிகாரிகள் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் மட்டும் கலந்து கொண்டதால் சோமனூர் உள்ளிட்ட மற்ற பகுதி ஜவுளி உற்பத்தியாளர்களையும் அழைத்து வரும் நவம்பர் 12 - ந்தேதி பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என முடிவு செய்து பேச்சுவார்த்தையை மீண்டும் ஒத்திவைத்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கூலியை உயர்த்தாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடபோவதாக விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்படுவதால் அடுத்த கட்ட முடிவு குறித்து இன்னும் ஓரிரு நாளில் விசைத்தறி தொழிலாளர்கள் அறிவிக்க உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X