என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற தனியார் பள்ளி நிர்வாகி கைது
Byமாலை மலர்23 Oct 2021 7:22 AM GMT (Updated: 23 Oct 2021 7:22 AM GMT)
ஆலூத்துபாளையம் பிரிவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்றுக் கொண்டிருந்த ஒருவரை சுற்றிவளைத்து போலீசார் பிடித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம், ஆலூத்துபாளையம் பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் அந்த பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆலூத்துபாளையம் பிரிவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்றுக் கொண்டிருந்த ஒருவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 62) என்பதும் வடுகபாளையத்தில் நர்சரி பள்ளி நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்கள், அவற்றை விற்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தனியார் பள்ளி நிர்வாகி மதுபானம் விற்பனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X