search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயி பலி
    X
    விவசாயி பலி

    நிலக்கோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

    நிலக்கோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). விவசாயி. நேற்று மாலை இவர், தனது தோட்டத்தில் பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்க கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது திடீரென கயிறு அறுந்து உள்ளே விழுந்ததில் படுகாயம் அடைந்த சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கிணற்றில் இருந்து சிவக்குமாரின் உடலை மீட்டு தீயணைப்பு படையினர் மேலே கொண்டு வந்தனர்.

    அதன்பிறகு பிரேத பரிசோதனைக்காக, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிவக்குமாரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×